Skip to main content
உளவளத் துணை அணுகுமுறைகள்.

நியாயித்தல் அணுகுமுறை.

ஒருவர் நியாயவாதி அல்லது பகுத்தறிவு வாதி போல் சிந்தித்தால்,செயற்பட்டால் எப்போதும் மகிழ்ச்சியாகவும்  ஆக்கத் திறனுடையவராகவும் விளங்குவார் .
மாறாக துன்பப் படுகிறவர்களும் சமூகப் பொருத்தப்பாடற்றவர்களும் நியாயித்தல் வாதிகளின் அல்லது பகுத்தறிவு  வாதிகளின் கொள்கைக்கு மாறு பட்டவர்களாகக் காணப்படுபவர்.

பிள்ளைப் பருவத்தில் சரியான குடும்பப் பிணைப்பு  அல்லது  உறவு இல்லாவிட்டால், இவ்வாறான நியாயித்தலுக்கு எதிரான கொள்கைகள் மாணவரிடம் தோன்றுகின்றன. 

ஒரு மாணவன் தன் பிள்ளைப் பருவத்தில் சில மூடக்கொள்கைகளை குடும்பப்  பெரியாரிடம் இருந்து  கற்றுக்  கொள்கிறான்.

நியாயித்தல் அணுகுமுறை பயன்படுத்தியவர்கள்:

ஆல்பட் எலிஸ் (1962)
ஹோலி  (1970)
கோன்  (1961)
விலியம்சன் (1950)

நியாயித்தல் தழுவிய அணுகுமுறைகள் அல்பேட் எலிஸ் உடைய  மெய்யெழுச்சி பரிகார முறை மிகவும் பிரசித்தி  பெற்றது.


நியாயவாதத்துடன் ஒவ்வாத மூட நம்பிக்கை உளக் குழப்பத்திற்கும் மெய் எழுச்சிகளுடன்  மனவெழுச்சிக் குழப்பத்திற்கும் பிரதான காரணம்  என்கிறார் எலிஸ்.ஆகவே ஒருவரின் செயல்களும் எண்ணங்களும் மூட நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கக் கூடாது  என வலியுறுத்தகிறார். இதனால் ஒருவர் பிறரால் அன்றி தானே தன்னை  நிராகரிக்கின்றான் என்கிறார்.


A  - மனவெழுச்சி தொடர்பாக உருவாக்கும் துயர் சம்பவம்
B  -  மூடநம்பிக்கை
C  -  தனியார் வெளிப்பாடு

இதன் படி ஒருவருடைய துன்பம் வெளிப்பாட்டுக்கு காரணம் (A) அல்ல. மனவெழுச்சி தொடர்பான துயர் அல்ல. அவருடைய  மூட நம்பிக்கை  அல்லது அவர் பெற்றிருக்கக் கூடிய  புலக்காட்சி ஆகும்.

"(C)"  "(A)" யினால் உருவாவது இல்லை.
"(C)" ஏற்பட "(B)"காரணமாகிறது என்பதை நியாய வாத அணுகுமுறை வலியுறுத்துகிறது.

நியாயவாதிகள் வாழ்வில் ஏற்படும் துயர  நிகழ்வுகளை இயற்கை  நிகழ்வு என ஒருவர் எண்ணுவாராயின் அது மனக் குழப்பத்தை ஏற்படுத்த மாட்டாது.

நியாய வாதக் கொள்கைகளை பின்பற்றாதவர் துன்பச் சம்பவங்கள் மிக பயங்கரமானவை என்றும்
இவ்வாறான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேர்ந்த தன்னை  துர் அதிஷ்ட்டசாலி எனவும் எண்ணித்துயரடைவர்.

எனவே ஆலோசனை நாடிக்கு தனக்கு ஏற்பட்ட துன்பச் செயலுக்கு நியாயங் கண்டு அதற்கு  தேவையான விளக்கத்தை தெளிவு படுத்தி விளக்கம் பெற்றுக் கொள்ளாமை காரணமாக துன்பத்துக்கு உள்ளாகியுள்ள விதத்தை உணர்த்த வேண்டும் .


எல்பட் எலிஸ் அவர்கள் முன்வைத்த  உணர்வு எழுச்சி  சிகிச்சை  மூலம் சேவை நாடி தமது பிரச்சினையை புத்திக் கூர்மையுடன் பகுப்பாய்வு  செய்யவும் அதன்படி தனது தர்க்க ரீதியான புத்தியை கட்டியெழுப்பவும் முடியும். இதனூடே பிரசினையை புத்தி சாதுரியத்துடன் விளங்கிக் கொள்ள சேவை நாடிக்கு அவகாசம்  கிடைக்கின்றது.

Comments

Post a Comment

Popular posts from this blog

உளவளத் துணை அணுகுமுறைகள் : நடத்தை  திருத்தியமைப்பு அணுகுமுறை:    நடத்தை வாத  கோட்பாட்டு குழாமை  ஆரம்பித்து  வைத்தவர் அமெரிக்க உளவியல்  அறிஞரான ஜே.பி.வொட்சன் என்பவராகும். பிராய்ட் முன்வைத்த உள்ளம் என்ற  எண்ணக்கருவை "வொட்சன்" நிராகரித்தார். இந்த எண்ணக்கரு துரிதமாக உளவியல் விஞ்ஞானத்தில்  இருந்து  அகற்றப்பட வேண்டும்  என்பதை "வொட்சன்" சுட்டிக் காட்டினார். உள்ளத்தின் செயற்பாட்டை  உள விஞ்ஞானமொன்றாக வொட்சன்  ஏற்றுக் கொள்ளாது அதற்காக  மனித  நடத்தையினை ஆய்வுகள், பரிசோதனைகள்,அவதானிப்புக்கள் மூலம் பரீடசித்துப் பார்க்க முயற்சித்தார். வொட்சனின்  பின்னர் பவ்லோ, தோண்டைக் போன்றோர் விலங்குகளை  பயன்படுத்தி  செய்த ஆராய்ச்சிகள் முக்கிய  இடத்தைப் பெற்றுள்ளன. தோண்டைக்  விலங்கு மற்றும் மனித நடத்தைகளை ஒன்றாக  தொடர்பு  படுத்தி வெளிச் சூழலில் பல்வேறு  தூண்டல்களுக்கு கிடைக்கும்  துலங்கல்களை வைத்து  மனித நடத்தைகள் மாற்றமடைவதாக கூறியுள்ளார் . ஏதுமோர் கற்றலின் அடிப்படையில் நடத்...
உளவளத் துணை அணுகுமுறைகள்:   உளப் பகுப்பாய்வுக் கொள்கை. சிக்மன்  ப்ராய்டின் உளத்தாக்கம் பற்றிய இரண்டாவது கொள்கை உளப்பகுப்பாய்வுக் கொள்கையுடன் தொடர்புடையது. நரம்புப் பிணி உள்ளத்தாக்கம், அகத்தின் பிரதிபலிப்பு, பிள்ளைப் பருவத்தில்  தண்டனைக்குப் பயப்படுதல், இட்டின் ( Id) நிறைவேறாத ஆசைகள் ஆகியன நனவிலி நிலையில் ஒடுக்கப்படுகின்றன. என விளக்கம் அளிக்கின்றார். ஆனால் இவை தகுந்த சந்தர்ப்பம் வரும் பொழுது  மீண்டும்  நனவு நிலைக்கு  வரலாம். இவனது அடக்கப்பட்ட நிறைவேறாத பாலியல்  ஆசைகளும் வன்செயல்ளும் வளர்ந்தோரின் எதிர்ப்பு காரணமாக  வெளிப்படுத்த முடியாது இருக்கக் கூடும். இச் சம்பவங்கள்  நனவிலி  உள்ளத்தில் ஒடுக்கப்படுகின்றன. அநேகமாக  பிள்ளையின் பாலியல் நடத்தையுடன் தொடர்புடைய நிகழ்ச்சிகளே இவ்வாறு ஒடுக்கப்படுவதாக பிராய்ட் கூறுகிறார். மேலும் இவை அமைக்கப்பட்ட கம்பிச் சுருள் போல நனவிலி  உள்ளத்தில் அடக்கப்பட்டிருப்பதாகவும் அடிக்கடி கனவு நிலைக்கு  திரும்பி வர முயன்று  கொண்டிருப்பதாகவும் கூறுகிறார். எனவே தற்போது பிள்ளைக்கு ஏற்ப...